இந்த அதி தீவிர சூறாவளி புயல் நாளை அதிகாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் டையூ இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 165 கிலோ மீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாயு புயல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.65 லட்சம் மக்கள் அரசு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சூறைக்காற்று பலமாக வீசுவதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முகாம்களின் தங்கியுள்ள மக்களுக்கு உடைகள், உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்பு படையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.