ADVERTISEMENT

தெலங்கானா பாரம்பரிய நடனமாடிய ஆளுநர் தமிழிசை!

12:32 PM Oct 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பதுக்கம்மா' என்பது தெலங்கானா மாநிலத்தில் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழா ஆகும். நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படும் காலகட்டத்தில் தெலங்கானாவில், மகாளய அமாவாசை நாளில் தொடங்கி, 9 நாட்கள் பதுக்கம்மா விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் தெலங்கானா பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள்.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான பதுக்கம்மா மலர் திருவிழா தொடங்கியுள்ளது. திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று (07/10/2021) தெலங்கானா ராஜ்பவனில் பதுக்கம்மா விழா கொண்டாடப்பட்டது. அப்போது பெண் ஊழியர்களுடன் இணைந்து, தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT