தமிழக மாநில முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து இந்திய குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

telangana state governor tamilisai appointment in president of india oath ceremony sep 8

Advertisment

Advertisment

இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 8- ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி செல்லும் தமிழிசை மத்திய அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.