ADVERTISEMENT

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது  

08:54 PM Sep 03, 2019 | kalaimohan

கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே.சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



கடந்த 2017 ஆம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது. அப்போது அவர் வீட்டிலிருந்து 8.59 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். 8.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு நாள் விசாரணைக்கு பின் டி.கே.சிவகுமாரை கைது செய்ததுள்ளது அமலாக்கத்துறை. காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது எம்எல்ஏக்களை தக்கவைக்க முயன்றவர் டி.கே.சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT