Skip to main content

பாலியல் சர்ச்சையில் இருந்து மீண்டு அதிமுக மா.செ. ஆனது எப்படி? 

Published on 28/07/2020 | Edited on 29/07/2020
paranjothi

கடந்த எம்.பி. தேர்தலுக்கு முன்பு திருச்சி மாவட்ட அதிமுகவில் உள்ள அனைத்து முத்திரையர் பிரமுகர்களும் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒருங்கிணைந்து முத்திரையர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு வேண்டும் என முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் முதல்வர் எடப்பாடியோ உங்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று சொல்ல, அந்த ஒருவர் யார் என்பதை தற்போது வரை யாரை சொல்வது என்கிற குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது.

 

காரணம் இந்த சமூகத்தில் இருக்கும் அதிமுக முக்கிய பிரபலங்கள் கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன், எஸ்.எம்.பாலன், வளர்மதி, அண்ணாவி,  சிவபதி, பிரின்ஸ் தங்கவேல், செல்வராஜ்,  பரமேஸ்வரி என பெரிய பட்டியலே உள்ளது. 

 

அதிமுகவை பொறுத்தவரையில் இவர்கள் அனைவருக்குமே ஜெ. பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தங்களுடைய பதவியை இழந்திக்கிறார்கள்.

 

இந்த போட்டியில் ஜெ.வினால் நேரடியாக ஒரங்கட்டப்பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்துவிட்டு எடப்பாடி வந்தவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை என பேசிக்கொள்ளும் பழக்கம் என பெருமையாக பேசிக்கொண்டு, கரோனோ காலத்திலும்  வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான்தான் என புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டே இருந்தார். 

 

ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்பில், சிவபதிக்கு மா.செ. வாய்ப்பு எல்லாம் கிடையாது, சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் அதுவரை கட்சியை வளர்க்கின்ற வேலைய பாருங்கள் என்று அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மா.செ. போட்டியில் பரஞ்சோதி – கே.கே.பாலசுப்ரமணியன், பிரின்ஸ்தங்கவேல் ஆகியோர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இதில் பரஞ்சோதி ஓ.பி.எஸ். தனி அணி அமைத்தபோது அவருடன் சென்று தீவிர ஆதரவாளர் என்கிற அங்கீகாரம் கிடைத்தது.

 

அதுவும் இல்லாமல் பரஞ்சோதியின் முக்கிய சர்ச்சையாக இருந்த, திருச்சி குமரன்நகரை சேர்ந்த டாக்டர் ராணி, ''அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனது பணம்  மற்றும் நகையை வாங்கி வைத்துக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்து  விட்டதாகவும்'' புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் செய்திருந்தார்.

 

கடந்த 2011ம் ஆண்டு அரசு மருத்துவமனை  போலீசார் பரஞ்சோதி, அவரது உதவியாளர்கள் சம்பத்குமார், செல்வகுமார்  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு திருச்சி  ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-4 கோர்ட்டில் நடந்து வந்தது.  பரஞ்சோதி உள்பட 3 பேரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி மதுரை  ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தனர். 

 

கடந்த 29.9.16 அன்று இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம்  முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பரஞ்சோதி உள்பட 3  பேரும், டாக்டர் ராணியும் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கில் தாங்கள்  சமாதானமாக செல்வதாக கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். மதுரையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு ரூ.75,000 நன்கொடை செலுத்தும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது. நன்கொடை செலுத்தப்பட்டதை தொடர்ந்து  பரஞ்சோதி, சம்பத்குமார், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் திருச்சி  கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்திலே வாபஸ் பெறப்பட்டதால், பாலியல் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு, பரஞ்சோதிக்கு மா.செ. வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 

கடந்த முறை 2012 ஆண்டு நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கே.என்.நேருவுக்கு எதிராக நின்று வெற்றிபெற்ற அனுபவம், அவருக்கு கூடுதல் அங்கீகாரத்தை கொடுத்ததால் இந்த பதவி கிடைத்துள்ளது. 

 

மண்ணச்சநல்லூர், முசிறி, ஶ்ரீரங்கம் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் வளர்மதி ஏற்கனவே ஶ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் மீண்டும் அந்த தொகுதி கேட்க வாய்ப்பு இருக்கிறது. வளர்மதி அரசியலில் பரஞ்சோதிக்கு ஜூனியர் என்பதால் தற்போது ஶ்ரீரங்கம் தொகுதி யாருக்கு என்பதில் பயங்கர போட்டி ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றதால் தற்போதே அதிமுக தேர்தல் களம் சூடுபறக்க ஆரம்பித்துள்ளது. 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.