ADVERTISEMENT

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு; பரபரப்பில் ஒடிசா

01:28 PM Jan 29, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போலீஸ் ஏட்டு குறி பார்த்து சுட்டதில் சுகாதாரத்துறை அமைச்சர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவின் பிரச்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் மீது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மருத்துவத்துறை அமைச்சர் நபாதாஸின் நெஞ்சு பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அமைச்சர் நபாதாஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸ் ஏட்டு கோபால் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அமைச்சர் கவலைகிடமாக உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT