Skip to main content

அவர் என் மகன் இல்லீங்க... போலீசில் புகார் கொடுத்த அமைச்சர் 

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

மதுபோதையில் காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களிடம் தகராறு செய்வது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ் அப்புகளில் பரவியது. இந்த வீடியோவில் தகராறு செய்பவர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சிலர் பரப்பியுள்ளனர்.

 

police

                                                                       போலீசாருடன் தகராறு செய்த நவீன்

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார் ஆட்டோ ஒன்றை மோதிவிட்டு நிற்காமல் சென்றதுடன், சாலையோர இளநீர் கடைக்குள் புகுந்து சுவற்றில் மோதி நின்றது. கார் மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் காயத்துடன் தப்பினார். 

 

 

police

                                    பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் கட்டு போட்டுள்ள நவீன்


இந்த சம்பவம் குறித்து அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரிக்க முயன்றபோது, அந்த நபர் போலீசார்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். போலீசாரையும் தாக்க முயற்சித்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ் அப்புகளில் பரவியது. 

அந்த நபரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இதில் அவர் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த நவீன் என்றும், அவர் பழ வியாபாரி என்றும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் அடையாறு காவல்துறையினருக்கு தகவல் அளித்து அவர்களிடம் நவீனை ஒப்படைத்துள்ளனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுகவினர் கூறும்போது, போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி அவர்களிடம் தகராறு செய்தவர், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் இல்லை. சி.வி.சண்முகத்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சி.வி.சண்முகத்தின் மகன் ஜெயசிம்மன் தற்போது ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருக்கிறார். அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிடுவது கண்டனத்திற்குறியது என்றனர். 

இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறுகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் சொல்லி புகார் கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.