ADVERTISEMENT

வேளாண் மசோதா - 88வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

09:25 AM Feb 21, 2021 | suthakar@nakkh…


மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமான கடந்த 26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது.

ADVERTISEMENT

இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்குதலில் காயம் அடைந்தனர். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கோபமான விவசாயிகள் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகளை டெல்லி நோக்கி அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் போராட்டம் எதிரொலியாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து நேற்று முன்தினம் பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தொடர்ந்து 88வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT