ADVERTISEMENT

டெல்லியில் ட்ராக்டர் பேரணியைத் தொடங்கிய விவசாயிகள்!

12:00 PM Jan 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 7 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், நாளை எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டெல்லியின் நான்கு எல்லைகளிலும் விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அதேபோல் ஹரியானா மாநில விவசாயிகள், பால்வால் மாவட்ட எல்லையிலிருந்து, டெல்லியின் சிங்கு எல்லைக்கு ட்ராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு, வரும் 26 ஆம் தேதி நடைபெறப்போகும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு, இன்றைய பேரணி ஒத்திகையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT