ADVERTISEMENT

டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்!

11:44 AM Dec 14, 2020 | suthakar@nakkh…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 19 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதில் இன்றைக்கு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலையில் நிறைவடைய இருக்கிறது. இதற்கிடையே டெல்லியின் முக்கிய சாலைகள் அனைத்திலும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது வரையில் அமைதியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT