பின்னர் மணமகன் தனது வாழ்கை துணைவியாக வரயிருப்பவளை எப்படியாவது கண்டுவிட வேண்டும் என்று, இரண்டுநாள்கள் கழித்து எதாவது ஒரு காரணத்தைக் கூறி மணமகள் வீட்டிற்கு செல்வான். ஆனால் அங்கு மாமனார் மட்டுமே பேசி முடித்து அவனை வீட்டிற்கு வழி அனுப்பி விட்டுவிடுவார். இதையடுத்து திருமணத்தில்தான் மணமகன், மணமகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
ஆனால் தற்போது செல்போன் மூலம் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் நெட்டிசன்களை உச் கொட்ட வைத்திருக்கிறது. நிஜத்தில் எப்படி நிச்சயதார்த்தம் நடைப்பெறுமோ அதேப்போல தம்பதியினர் வீடியோ காலில் இருக்க அவரது குடும்பத்தினர் ஆடை, அணிகலன்களை போனின் முன்பு வைத்து நிச்சயம் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.