Skip to main content

செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

சேலத்தில், செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேகதர்ஷினி என்ற ஒரு மகளும் இருந்தாள். கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். 

 

 School student suicides because the cellphone is not bought

 

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராமச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதையடுத்து மூத்த மகன் கார்த்தி குடும்ப பொறுப்புகளை ஏற்றார். மாணவி மேகதர்ஷினிக்கு செல்போன் மீது கொள்ளை பிரியம் இருந்து வந்துள்ளது. டிரைவராக உள்ள கார்த்தி வீட்டுக்கு வந்ததும் அவருடைய செல்போனை எடுத்து அதில் நீண்ட நேரம் விளையாடி வந்துள்ளார்.


இப்படி அடிக்கடி என்னுடைய செல்போனை எடுத்து விளையாடிக் கொண்டே இருந்தால் எப்படி? என்று கார்த்தி, தங்கையை கண்டித்துள்ளார். அதற்கு அவர், அப்படியெனில் எனக்கு தனியாக ஒரு செல்போன் வாங்கி கொடு என்று கேட்டாராம். அதற்கு மறுத்த கார்த்தி, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் புதிதாக செல்போன் வாங்கிக் கொடுக்கிறேன் என்று தங்கையிடம் கூறியுள்ளார்.


இதனால் அண்ணன், தங்கை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை தாயார் சமாதானப்படுத்தினார். பலமுறை செல்போன் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டும் கிடைக்காத விரக்தியில் இருந்த மேகதர்ஷினி தற்கொலை செய்து கொள்ளும் முடிவில், இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து விட்டார். 


வீட்டில் மகள் மயங்கிக் கிடப்பதை அறிந்த அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை (செப்டம்பர் 12, 2018) மேகதர்ஷினி பரிதாபமாக உயிர் இழந்தார். கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். செல்போன் மீதான மோகம் பள்ளி மாணவியின் உயிரை காவு வாங்கிய நிகழ்வு அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.     

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.