ADVERTISEMENT
ADVERTISEMENT
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள் மற்றும் ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் என மொத்தம் 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் இந்த அமைப்புகளுக்குச் சொந்தமான ரூ.68.62 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அமைப்போடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறி இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments