ADVERTISEMENT

ஆதார் எண்ணை பகிர வேண்டாம்-ஆதார் நிறுவனம்  

11:05 AM Aug 22, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

இணையதளம், சமூக வலைதளம் போன்ற தேவையற்ற இடங்களில் யாரும் தங்களுடைய ஆதார் எண்ணை பகிரக்கூடாது என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வெளிப்படையாக பகிரக்கூடிய எண் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணில் கைரேகை, கருவிழி ஸ்கேன், க்யூஆர் கேட் உள்ளிட்டவைகளை சரிபார்க்கும் முக்கிய அம்சங்கள் இருப்பதால், இதை வைத்து குளறுபடி செய்ய முடியாது என்றாலும் சிலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேவையில்லாத தங்களின் தனிப்பட்ட விவரங்களை நாம் யாருக்கும் பகிர விரும்புவதில்லை, அதுபோலத்தான் ஆதார் எண்ணையும் நாம் யாருக்கும் பகிர தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT