Skip to main content

ஆதாருக்கு மூடுவிழா..? நடுத்தெருவில் ஊழியர்கள்....!!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

தனிமனிதனுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமா.? இல்லையா.? எனும் கேள்வி இன்று வரை நீடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஆதார் மையங்களில் பணிபுரியும் 376 ஊழியர்களின் ஐ.டி.யை முன்னறிவிப்பின்றி பிளாக் செய்ததோடு மட்டுமில்லாமல், கேள்வியேக் கேட்க வழியில்லாமல் அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது தமிழக அரசின் எல்காட் நிறுவனம்.

 

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!


 

தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பிப்ரவரி மாதம் இந்தியாவில் துவக்கப்பட்ட திட்டமே தனிமனித அடையாளத்தை உள்ளடக்கிய "ஆதார்" திட்டம். இந்த 12 இலக்க அடையாள அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும் மனிதனின் தனிப்பட்ட சுயவிவரக் குறிப்புகளும் அடங்கியிருக்கும். நாட்டில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் 2011ம் ஆண்டு வெற்றிகரமாக இதனை எல்காட் நிறுவனம் இயக்கியது.

 

 

இதற்கென தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 500 ஆதார் மையங்களை திறந்த எல்காட் நிறுவனம் மையங்களுக்கென சொற்ப தொகையினை சம்பளமாக தந்து கணிணி ஆப்ரேட்டர்களையும் பணிக்கு அமர்த்தியது. ஆனால் பணியாளர்களுக்கான சம்பளத்தை தந்தது சென்னை மடிப்பாக்கம் சீனிவாச நகரிலுள்ள நியூ லைப் பிளேஸ்மெண்ட் நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக ஆதார் மைய கணிணி ஆப்ரேட்டர்கள் பணியாற்றி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த புதன்கிழமை முதல் ஏறக்குறைய 376 ஆப்ரேட்டர்களின் ஐ.டி.யை பிளாக் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகின்றது எல்காட் நிறுவனம். இதனால் ஊழியர்கள் நடுத்தெருவில் நிற்பது ஒருபுறம் எனினும், ஆதார் மையங்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 Aadhar closing ceremony ..? Staff in the middle street...!!!



 
"ஆதாரை முழுவதுமாக மூடப்போகிறார்களா என்பது தெரியவில்லை..! காலை எட்டு மணி துவங்கி இரவு எட்டு மணி வரை பணியாற்றி வந்தாலும் மாதம் ரூ.7645 மட்டுமே சம்பளம் வழங்கி வந்தனர். இந்நிலையில் எங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென நாங்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைக்க, திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையில் பல கட்டமாக ஆப்ரேட்டர்களுக்கான சந்திப்பை நடத்தியவர்கள் இந்த ஜூனில் சம்பள உயர்வு தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடுமென 376 நபர்களின் ஐ.டி.யையும் பிளாக் செய்து விட்டனர். இப்போதைக்கு நாங்கள் வேலையில் இருக்கிறோமோ.? இல்லையோ.? என்பதும் தெரியவில்லை. இதனை நம்பிய நாங்கள் நடுத்தெருவில் நிற்கின்றோம். அரசு தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்" என்கின்றனர் பணியிலிருந்து ஐ.டி.பிளாக் செய்யப்பட்ட ஊழியர்கள்.

 
ஆதாரும், ஆதார் மைய ஊழியர்களும் உண்டா.? இல்லையா.? என்பதனை அரசு தான் அறிவிக்க வேண்டும்..!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.