ADVERTISEMENT

15 நிமிடம் விடாமல் கடித்த நாய்... 12 வயது சிறுவன் படுகாயம்!

07:18 AM Jan 29, 2020 | suthakar@nakkh…

சிறுவன் ஒருவனை பிட்புல் ரக நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பஞ்சாப் மாநிலம் ஜலந்த் பகுதியைா சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை டியூஷன் செல்வதற்காக அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார்.வகுப்பு முடிந்து மாலையில் டியூஷன் சென்டரில் இருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு அருகில் வந்தபோது அவரை பிட்புல் ரக நாய் ஒன்று அவரது கால்களை கடித்துள்ளது.


ADVERTISEMENT


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த நாயை அடித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து 15 நிமிடங்கள் அந்த நாய் சிறுவனை கடித்துள்ளது. பிறகு கடும் முயற்சிக்கு பிறகு நாயிடம் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT