சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துக்கொள்வற்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செர்பியா நாட்டிற்கு செல்கிறார்.
ADVERTISEMENT
சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கனிமொழி, சசிதரூர், ராம்குமார் வர்மா உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று செர்பியா நாட்டிற்கு செல்கிறது.
ADVERTISEMENT
நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற யூனியன் கூட்டம், அக்டோபர் 18- ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments