ADVERTISEMENT

2 மணிநேரத்தில் பட்னாவிஸ் அடித்த அந்தர் பல்டி! துணை முதல்வராக பதவியேற்பு!!

10:41 PM Jun 30, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தனர். கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். 35க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் சொகுசு விடுதியில் முகாமிட்டு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே முதல்வர் பொறுப்பிலிருந்து உத்தவ் தாக்கரே விலகிய நிலையில் பாஜக மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று மாலை அவருடன் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான பட்னாவிஸ், " அமையப்போகும் இந்த அரசில் தான் எந்த ஒரு அமைச்சர் பொறுப்பையும் ஏற்க மாட்டேன்" என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் பேட்டியளித்த சில நிமிடங்களில் மகாராஷ்டிரா அரசில் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்க வேண்டும். துணை முதலமைச்சராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக தலைவர் நட்டா ட்வீட் செய்திருந்தார். இதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் இரவு எட்டு மணி அளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பட்னாவிஸ்ஸும் பதவியேற்றுக்கொண்டனர். 2 மணி நேரத்தில் தான் சொன்ன கருத்துக்கு மாற்றாக பட்னாவிஸ் செயல்பட்டுள்ளது தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT