ADVERTISEMENT

"இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை"- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

07:57 PM Feb 25, 2020 | santhoshb@nakk…

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, "நமது நாட்டில் வன்முறைக்கு இடமில்லை; அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT