ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால். இவர் பயன்படுத்தப்பட்ட சோஃபாவை, ஓ.எல்.எக்ஸ் தளத்தில் விற்க முயன்றுள்ளார். அப்போது சோஃபாவை வாங்க பேரம் பேசி முடித்த ஒருவர், குறிப்பிட்ட தொகைக்கு ஒத்துக்கொண்டு, முதலில் ஒரு சிறிய தொகையை அனுப்பியுள்ளார்.
இதன்பிறகு சோஃபாவிற்கான மீதி பணத்தை அனுப்புவதற்கு, பார் கோட் ஒன்றை அனுப்பி, அதனை ஸ்கேன் செய்யக் கூறியுள்ளார். ஹர்ஷிதா அதனை ஸ்கேன் செய்ததும், அவரது வங்கி கணக்கிலிருந்து முதலில் 20 ஆயிரமும், பின்னர் 14 ஆயிரமும் பறிபோயுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments