டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டது. மேலும் ஐந்து விமானங்கள் வேறு விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. 84 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பனிமூட்டத்தால் நேற்று மட்டும் சுமார் 200 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Show comments