ADVERTISEMENT
ADVERTISEMENT
புதிதாக சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான காப்புத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு சிலிண்டர் என்றால் இதுவரை 1,450 ரூபாய் காப்புத்தொகைப் பெறப்பட்டுள்ளது. இதை 2,200 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதுவே இரண்டு சிலிண்டர் பெற விரும்பினால் 2,900 ரூபாயாக இருந்த காப்புத்தொகை 4,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்து கிலோ சிலிண்டர் பெற விண்ணப்பித்தால், காப்புத்தொகை 800 ரூபாயிலிருந்து 1,150 ஆக அதிகரித்துள்ளது. ரெகுலேட்டர் காப்புத்தொகையும் 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ADVERTISEMENT
Show comments