ADVERTISEMENT

துணிப் பை-க்கு 3 ரூபாய் கேட்ட பாட்டா: 9000 ரூபாயை அபராதமாக விதித்த நீதிமன்றம்...

05:07 PM Apr 15, 2019 | kirubahar@nakk…

சண்டிகரில் உள்ள ஒரு பாட்டா கடையில் துணிப்பை ஒன்றுக்கு 3 ரூபாய் வாடிக்கையாளரிடம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர் இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி சென்றுள்ளார். அங்கு பாட்டா நிறுவனத்திற்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த தீர்ப்பின்படி வாடிக்கையாளருக்கு வழக்கு செலவுத்தொகையாக 1000 ரூபாய், வாடிக்கையாளருக்கு இழப்பீட்டுத் தொகையாக 3000 ரூபாய் மற்றும் அபராதமாக 5000 ரூபாய் என மொத்தம் 9000 ரூபாயை பாட்டா நிறுவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது. வெறும் 3 ரூபாய் பை-க்காக பாட்டா நிறுவனம் 9000 ரூபாய் இழந்த சம்பவம் அனைவராலும் சுவாரசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT