ADVERTISEMENT
ADVERTISEMENT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பா.ஜ.க. முடிச்சு போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? அந்தமான் தீவின் சுனாமி நிவாரணத்துக்கு ராஜீவ்காந்தி அறக்கட்டளை 2005-இல் ரூபாய் 20 லட்சம் பெற்றது உண்மைதான். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப்பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்போது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Show comments