ADVERTISEMENT

இந்திய பகுதியில் குடியிருப்பை ஏற்படுத்திய சீனா - பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்!

10:14 AM Feb 20, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய - சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் சீன இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உட்பட ஐந்து பேர் பலியானதாக தற்போது சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத் தொடர்ந்து, பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன. இதனையொட்டி இருநாடுகளுக்குமிடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று (20.02.2021) நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, இந்திய பகுதியில் சீனா குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவும் சீனாவும் பங்கோங் ஏரி பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை நிறைவு செய்துள்ளதாக இன்று ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதாவது ஜூன் மாதத்தில், உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்று நாம் எடுத்துக்கொண்ட பகுதிகளை இந்தியா விட்டுவிட்டது. ஆனால் சீன இராணுவம் உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, நமது பக்கத்திலுள்ள டெப்சாங்கில் குடியிருப்புகளைக் கட்டியது. அதன் நிலையென்ன? அமைதி." என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.பியே, சீனா இந்திய பகுதியில் குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT