ADVERTISEMENT

இரண்டாவது டோஸ் தடுப்பூசி; தேதியை அறிவித்தது மத்திய அரசு!

04:26 PM Feb 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் பணிகள், கடந்த 16 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசிகள் இரண்டு முறை செலுத்தப்படும். இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால்தான் கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். இந்தநிலையில் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்களுக்கு, இரண்டாம் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கும் தேதியை நிதி ஆயோக் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக், "கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பிப்ரவரி 13 முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும். இதுவரை அவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT