Skip to main content

வெளிநாட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு - காரணம் என்ன?

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

union health ministry

 

இந்தியாவில் மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இன்று (10.08.2021) காலை 8 மணிவரை 51 கோடியே 9 லட்சத்து 58 ஆயிரத்து 562 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே, இந்தியாவில் உள்ள வெளிநாட்டவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள வெளிநாட்டவர்கள், தங்களது பாஸ்போர்ட் மூலம் கோவின் செயலியில் பதிவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 

"இந்தியாவில் குறிப்பாக பெருநகரங்களில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது அவசியம். பெருநகரங்களில், அதிக மக்கள் தொகை அடர்த்தியால் கரோனா பரவலுக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்குத் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்" என வெளிநாட்டவருக்குத் தடுப்பூசி செலுத்தும் முடிவு குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரியலூரில் பொங்கல் விழாவைக் கொண்டாடிய வெளிநாட்டினர்!

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ரீடு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அன்பகத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு  சுமார் 30க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

 

இந்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்கக்கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே, ராபின், வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாட அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த வெளிநாட்டினர் அனைவரும் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து ஆண்டிமடம் ரீடு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்து அங்கு பயிற்சி பெறும் பெண்களுடன் இணைந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பாகக் கொண்டாடினர். அங்கிருந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகளுடன் கலந்து பேசி அவர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

மேலும் அவர்கள் நமது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கும்மியடித்து செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். அவர்களும் சூரியனை வழிபட்டனர். அங்கிருந்த அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பொங்கல் உணவை ரசித்து உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பங்கேற்று சிறப்பித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும்,  பெருமையாகவும் இருப்பதாகக் கூறினர்.

 

foreigners celebrated in pongal festival at  ariyalur district 

ரீடு தொண்டு நிறுவனத்தில் இருந்தவர்களும், "இவ்வாண்டு வெளிநாட்டினர் தங்களுடன் வந்து கலந்துகொண்டு பொங்கலைக் கொண்டாடியது மகிழ்ச்சியாகவும் புதிய அனுபவமாக இருப்பதாகவும்" கூறினர். வெளிநாட்டினர் நம் தமிழக மக்களுடன் கொண்டாடிய பொங்கல் விழா நிகழ்ச்சி ஆண்டிமடம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.