ஜார்கண்ட் மாநிலம், கொட்டா மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கலந்துகொண்டார். இந்நிலையில், இவ்விழாவில் பேசிக்கொண்டிருந்த பாஜக தொண்டர் ஒருவர், எம்பியை நிற்க சொல்லி அவரது காலை கழுவி, பின்னர் அந்த நீரை குடித்து, தலையில் தீர்த்தமாக தெளித்துக்கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments