ADVERTISEMENT
ADVERTISEMENT
உத்திரபிரதேசத்தில் பாஜக எம்பியை பாஜக எம்எல்ஏ ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டுப் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்பி சரத் திர்பாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங், எம்பி சரத் திர்பாதியை செருப்பால் தாக்கினார். அதனை அடுத்து பாஜக எம்பியும் பாஜக எம்எல்ஏ ராகேஷ்சிங்கை செருப்பால் திரும்ப தாக்கினார். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
ADVERTISEMENT
Show comments