ADVERTISEMENT

பாஜக நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை

11:51 AM Jun 23, 2018 | santhoshkumar

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ADVERTISEMENT


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் புறநகர் மாவட்டத்தின் பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தவர் முகமது அன்வர். இவருக்கு வயது 43. நேற்று இரவு அவர் கவுரி கால்வாய் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மற்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

ADVERTISEMENT

இதனால் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்திலுள்ளவர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் அவர் எற்கனவெ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் எற்பட்ட மோதலின் காரண்மாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT