ADVERTISEMENT
ADVERTISEMENT
பா.ஜ.க. தலைவர் சாமிநாதனின் மனைவியிடம் 85 சவரன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட, பெண் உள்பட இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநில பா.ஜ.க.வின் தலைவர் சாமிநாதனின் மனைவியான விஜயலட்சுமியிடம், அவரது தோழி விஜயகுமாரி என்பவர் குழந்தைகளின் படிப்பு செலவு, திருமணம் செலவிற்காக பணம் கேட்டுள்ளார். இதனால் தனது நகைகளைக் கொடுத்து, விஜயலட்சுமி உதவிச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கொடுத்த 85 சவரன் நகைகளைக் கேட்டபோது, விஜயலட்சுமி முறையாகப் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விஜயகுமாரி மற்றும் உறவினர்கள் மீது விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
Show comments