ADVERTISEMENT
ADVERTISEMENT
நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்கம் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் நாளை வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Show comments