ADVERTISEMENT
கர்நாடகா மாநிலம் மங்களூர் காவல் நிலையத்திற்கு அருகே ஓமத்துகிரே என்ற பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த தனியார் நிலத்தில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள் ஒன்றாகக் கூடி கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேட்ஸ்மேன் அடித்த பந்து, மரத்திலிருந்த தேன் கூட்டில் பட்டதாகத் தெரிகிறது. இதனால் தேன் கூட்டிலிருந்து கிளம்பிய குளவிகள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டியது. இதனால் அந்த இளைஞர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தால் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இளைஞர்கள் பதறி அடித்து ஓடும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments