மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்புதான் சக்தி வாய்ந்தது. இந்திய மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். பாஜகவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். எதிர்கால ஆட்சி நன்றாக அமைய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முறை அவர் நற்பணி செய்வார் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Show comments