இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இரட்டை எஞ்சின் அரசு என்றால் வேலை வாய்ப்பு இல்லாதோருக்கு இருபுறமும் தாக்குதல் நடக்கிறது. 1.5 லட்சம் அரசு வேலைகள் காலியாக உத்தரப் பிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையற்றோராக உள்ளனர். பட்டப்படிப்பு, PhD முடித்தவர்கள் அடிப்படை கல்வி தகுதிக்கு கிடைக்கும் வேலைக்காக வரிசையில் நிற்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் பணிச் சேர்க்கை நடப்பதே கனவாக இருக்கிறது. அப்படியே நடந்தால் வினாத்தாள் கசிகிறது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியாவதில்லை. முடிவுகள் வெளியானால், பணி நியமனத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. வேலை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது.இத்தகைய சூழலில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவம், ரயில்வே, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பணிக்காக காத்திருக்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடைந்து போகின்றனர்.