ADVERTISEMENT

’அஃப்ரிடி இந்தியாவுக்கு விரோதமானவர்’- சிவசேனா 

02:31 PM Nov 16, 2018 | santhoshkumar


சமீபத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமராக பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுறுவ அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய இராணுவம்.

ADVERTISEMENT

இந்நிலையில் இங்கிலாந்து மாணவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ள பாக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சகித் அஃப்ரிடி, “ பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் வேண்டாம், இந்தியாவுக்கும் காஷ்மீர் வேண்டாம். பாகிஸ்தானால் நான்கு மாநிலங்களையே சமாளிக்க முடியவில்லை அதேபோல அதை இந்தியாவுக்கு தர வேண்டாம். அந்த மாநிலத்தை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படுவது மனிதநேயம்தான். அந்த மக்கள் எதிர்பார்பது மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைதான்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக கடந்த எப்ரல் மாதத்தில் கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில், அஃப்ரிடியின் இந்த கருத்தை சிவசேனா வரவேற்றுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டான சாம்னாவில் இதுகுறித்து தெரிவித்தது: பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் உயிர்பெற்று சீராகச் செல்ல நிதி உதவி எனும் ஆக்சிஜன் அவசியம். அப்படி இருக்கும்போது, அந்த நாடு எப்படி காஷ்மீரை பாதுகாக்க முடியும். ஷாகித் அஃப்ரிடி மட்டுமல்ல, நடுநிலையான, புத்திசாலி பாகிஸ்தானியர்கள் அனைவரும் அப்ரிடி கூறிய கருத்துக்களை ஆதரிப்பார்கள், அதே சிந்தனையில்தான் இருப்பார்கள். அதேபோல பாகிஸ்தானிய வீரர் ஷாகித் அஃப்ரிடி என்பவர் இந்தியாவுக்கு விரோதமானவர்தான். ஏனென்றால், இதற்கு முந்தைய காலத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி இருக்கிறார். உதாரணமாக, இந்தியப் பகுதிக்குள் நுழைந்த 13 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றபோதிலும் கூட தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், காஷ்மீரின் சுதந்திரத்துக்காகவும் பேசுகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT