உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் 827 ஆபாச வலைதளங்களை தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ADVERTISEMENT
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் 850 ஆபாச வலைதளங்களை தடை செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை பெற்றுக்கொண்ட மத்திய மின்னனு மற்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆய்வு ஒன்ற நடத்தியது. அந்த ஆய்வில் 30 இணையதளத்தில் ஆபாச தகவல்கள் இல்லாததை தொடர்ந்து 827 ஆபாச இணையதளத்தை தடை செய்ய மத்திய தகவல் தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில் இதுகுறித்து தகவல் தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உத்தரகாண்ட் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், Meityயின் வழிமுறைகளின்படி, 827 ஆபாச இணையதளங்களின் இணையதள சேவையை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Show comments