ADVERTISEMENT

கடும் விலைச்சரிவு காரணமாக 3000 கோழிகள் உயிருடன் புதைப்பு... வைரலாகும் வீடியோ!

05:11 PM Mar 12, 2020 | suthakar@nakkh…

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT


சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்து வந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த நசீம் என்பவர் தனது பண்ணையில் இருந்த கோழிகளை பராமரிக்க முடியாததால், 6000 கோழிகளை ஒரே நேரத்தில் உயிருடன் புதைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT