ADVERTISEMENT

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 6 விமான நிலையங்களை தனியாரிடம் விட முடிவு..?

09:11 AM Aug 24, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உட்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்களைத் தனியாரிடம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிநிலையைக் காரணம் காட்டி இந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும், நீலகிரி மலை ரயிலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT