நாட்டில் உள்ள ஒருசில விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில், தற்போது இதுகுறித்து மக்களவையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சரான ஹர்தீப் சிங் புரி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேற்கு வங்க எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "விமான நிலையங்களை அதன் தகுதி அடிப்படையில் தனியார் மயமாக்குதல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி தனியார் மயமாக்கலுக்காக நாடு முழுவதிலுமிருந்து 6 முக்கிய விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 விமான நிலையங்களை தனியாருக்கு அளிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. 6 விமான நிலையங்களுக்காக 9 நிறுவனங்களிடம் இருந்து ஏல டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.