ADVERTISEMENT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சில சிறப்பான நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இது புரட்டாசி மாதமாதலால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் 5,13,566 லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவே தற்போது அதிகபட்ச சாதனையாக உள்ளது. இதற்குமுன் 4,64,152 லட்டுகள் விற்பனையானதுதான் அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments