ADVERTISEMENT

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கரோனா!

03:29 PM Jan 12, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேச தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்ததையொட்டி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கரோனா பரிசோதனையில் 42 பணியாளர்களுக்கு கரோனா உறுதியானதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானோர், தூய்மை பணியாளர்கள் எனவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள தகவலறிந்த வட்டாரங்கள், பாஜக தலைமை அலுவலகமும் முழுமையாக தூய்மைபடுத்தப்பட்டதாக கூறியுள்ளன.

ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT