ADVERTISEMENT
ADVERTISEMENT
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசிய புகாரில் காவலர் மகாராஜனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே நீதிபதிகள் உத்தரவால் குமார், பிரதாபன், மகாராஜன் இன்று (30/06/2020) காலை 10.30- க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகின்றனர்.
Show comments