ADVERTISEMENT

தமிழகத்தின் 33- வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்!

10:39 AM Nov 22, 2019 | santhoshb@nakk…

நெல்லையில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேரில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 33- வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகியுள்ளது.

ADVERTISEMENT


தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் , தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர தயாளன், தலைமை செயலாளர் சண்முகம், உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT



மேலும் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புத்தூர், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களும் தென்காசியில் வருகின்றன. அதேபோல் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களும் தென்காசி மாவட்டத்தில் வருகின்றன.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT