ADVERTISEMENT

"செம்மொழி தமிழாய்வு நிறுவன கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பார்"- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

04:31 PM Feb 19, 2020 | santhoshb@nakk…

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யனின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு நிறுவன கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குனர் விரைவில் நியமிக்கப்படுவார். தொல்லியல் துறைக்கு ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மூலம் தமிழுக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பது தெரியும். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் அதிமுக அரசால் அதிக அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன." இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT