ADVERTISEMENT

பி.ஆர்.ஓ.க்கள் அதிரடி மாற்றம்! 

11:48 AM Jul 24, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட பி.ஆர். ஓ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சரவணன் அரியலூர் மாவட்டத்திற்கும், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி கடலூர் மாவட்டத்திற்கும், திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகன் பிரைட் ஊட்டிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் ராமநாதபுரத்திற்கும், விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ள பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சிக்கும், ஈரோடு மாவட்ட TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தீபா சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கும், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் ஈரோடு TNSTC யின் பி.ஆர்.ஓ.வாகவும், கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி கோவை மாநகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுதவிர, ஏ.பி.ஆர்.ஓ.க்களாக இருந்த 6 பேர் பி.ஆர்.ஓ.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி, சிவகங்கை கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு, சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கரூர் செந்தில்குமார் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், கிருஷ்ணகிரி மோகன், வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும், திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT