ADVERTISEMENT

நாகை மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

11:05 AM Feb 03, 2024 | prabukumar@nak…

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து ராமன் மற்றும் பொன்னுதுரை என்பவர்களுக்கு சொந்தமான 2 படகுகளில் 5 மீனவரக்ள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மின்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT