ADVERTISEMENT

நெடுவாசல் வந்தாரா முகிலன்... காவல் துறையினர் ரகசிய விசாரணை!!!

09:36 PM Apr 29, 2019 | bagathsingh

சமூக செயற்பாட்டாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட்க்கு எதிரான ஆவணங்களை வெளியிட்ட நிலையில், சென்னையிலிருந்து மதுரை சென்ற ரயிலில் ஏறியவர் மதுரைக்கு போய் சேரவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த ஆதாரங்கள் வெளியான நிலையில் நான் கடத்தப்படலாம் என்று சொன்னவரை 3 மாதங்களுக்கு மேலாக காணவில்லை. தமிழ்நாடு முழுவதும் முகிலனை காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகிலனுடன் போராட்டங்களில் பங்கெடுத்த ராஜேஸ்வரி, முகிலன் மீது ஒரு புகார் கொடுத்தது பரபரப்பானது.


இந்த நிலையில் முகிலன் மற்றும் ராஜேஸ்வரி நெடுவாசல் போராட்டங்களில் கலந்து கொண்டிருந்ததால், தற்போது நெடுவாசல் சென்ற போலிசார் முகிலன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் நெடுவாசல் போராட்டங்களில் பங்கேற்றார்களா? எத்தனை நாட்கள் பங்கேற்றார்கள், பங்கேற்ற நாட்களில் அவர்கள் எங்கே தங்கி இருந்தனர்? என்றெல்லாம் விசாரித்துள்ளனர். காணாமல் போனபிறகு முகிலன் நெடுவாசல் வந்தாரா என்றும் விசாரித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT