திமுக மகளிரணி மாநிலத் தலைவரும், திமுக நாடாளுமன்றக் குழு துணைத்தலைவருமான கனிமொழியை, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா, கடந்த 28- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்.
யுவாந்தி அணில் சாகேத் பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு கனிமொழி தரப்பில் பேசியபோது, அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்தார்கள். இது குறித்த நடவடிக்கையில் தீவிரம் காட்டினார் கனிமொழி. அந்த இளம் பெண்ணை மகாராஷ்டராவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஊருக்குச் செல்வதற்கான அனுமதிக்கடிதம் 28 -ஆம் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு பெறப்பட்டது. அந்தப் பெண்ணோடு திமுக மகளிரணி நிர்வாகிகள் இருவருமாக, மூன்று பெண்களும் செல்வதற்கு முறையான அனுமதியை இரவு 11 மணிக்குப் பெற்று, அன்றைய தினம் இரவு 2 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.
2,400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய மகளிரணியினரைக் கனிமொழி பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும், மகாராஷ்டிரா எம்.பி. சுப்ரியாவும், கனிமொழியின் உடனடி தலையீட்டிற்கும், மகளிரணியினருக்கும் நன்றி தெரிவித்தனர்.