அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
ADVERTISEMENT
இந்த நோட்டீஸை எதிர்த்து ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக, அந்த நோட்டீஸ்க்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. இந்த விசாரணை வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments